...

14 views

தமிழனின் தலைவன்...
ஈழ மண்ணின் மைந்தன்
தமிழனின் தலைவன்....
சரித்திரங்களில் பெயர்
பெற போராடியவர்கள் மத்தியில்
பெரும் சரித்திரத்தையே
உருவாக்கிய போர்வீரன்...

விடுதலையொன்றே
உயிர்மூச்சாய் கொண்டவன்..
தனக்காக இல்லாமல்
தன்னைச் சார்ந்தவர்களுக்காக
வாழ்ந்த தன்னிகரில்லா தலைவன்....

காடொன்று பற்றியெரிய
சிறு தீப்பொறி போதும்தான்...
இங்கோ பெரும்
எரிமலையையே
எம் வசமுள்ளது...
மண்டியிடா வீரம்
எம் தலைவனின்
குருதியில் கலந்ததே...

எம் தலைவனை
இவ்வுலகுக்கு தந்ததால்
இந்நாள் சரித்திரத்தின்
பொன்நாள்...

வாழ்த்தி வணங்குகிறேன்
தலைவா...!

© நித்திலன்...🎭