...

12 views

பிழை
அவளையே சுற்றி வந்து
காதல் வசனம் பேசிக் கொண்டு
பந்தாசந்தா பரிசாய் தந்து
கடமை கண்ணியம் கட்டுப்பாடு
எல்லாம் மறந்தவனுக்கு
வீட்டில் மனையாளும் மழலையரும்
நிறை என்பதும்
அலுவலும் வாழ்வியலும்
முறை என்பதும்
ஒழுக்கமும் விழுப்பமும்
வரையென்பதுவும்
நிலைகெட்டவனுக்கு
நினைவிலில்லை போலும்
நினைவு மீண்டு நீ
உயிர்த்தெழும் வரை
உன் பிறப்பும் வளர்ப்பும் இறப்பும்
கறை நிறைந்த பிழை
© கவிநேசகி