முதல் நீ.. ♥️ முடிவும் நீ.. ♥️
முதல் நீ.. ♥️ முடிவும் நீ.. ♥️
கேட்பாரற்று திறந்து கிடக்கும்
புத்தகத்தின் பக்கங்களை
காற்று புரட்டி பார்த்து
கதை சொல்வது போல்..
என் உணர்வுகள் கொட்டி எழுதிய
நாட்குறிப்பின் பக்கங்களை..
எனக்கு நானே வாசித்து
கொண்டிருக்கிறேன்..
அதன் வரிகளில் நேசத்தின் வாசம்
இன்னும் அப்படியே இருக்கிறது..
நினைவுகள் உதிர மனமின்றி
ஒட்டிக்கொண்டு
உறவாடுகின்றன..
அதன்
முதல் பக்கத்தில்..
என்பெயரோடு சேர்த்து எழுதிய
உன்பெயர்..
என்னவென்று எவரும்
அறிந்துவிட கூடாதாதென்று
ஒன்றோடு ஒன்று கலந்து
எழுதியதால்
இரண்டிற்கும்
அப்படி ஒரு பிணைப்பு நாம் பிரிந்த பின்பும்
அவை ஒட்டிக்கொண்டுதான் இருக்கின்றன..
அதன் சில பக்கங்களில்
நான் மட்டுமே பேசிகொண்டிருந்தேன்..
அவை
உனக்கு சொல்ல நினைத்த
என் காதல் கிறுக்கல்கள்..
அதன் இன்னும் சில பக்கங்கள்
பட்டாம்பூச்சிகளின் குடியிருப்பை போல
என்று என்னும் அளவிற்கு..
அத்தனை வண்ணங்கள் சுமந்து
உன்னை வரவேற்று கொண்டிருந்தன..
விண்மீன் பறித்த கதை சொல்லி
நீ பேசிக்கொண்டிருக்க நான்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்..
இடையில் சில பக்கங்கள்
நம் கண்ணாமூச்சி காதலை..
கண்டும் காணாமலும்
கடந்து போக..
கவிதைக்கும் கற்பனைக்கும்
உயிர் தந்த நம் காதல்
ஒரு தொடுவானம் தேடிய
பயணம் போல் நீள்கிறது
எத்தனை தூர பயணம் என்றால்..
இனி வரும் பிறவிகளிலும் கூட
நம் இப்படியே..
தொடர்வோம் என்னும் அளவிற்கு..
முதல் பார்வைகள்
முதல் முத்தங்கள்
முதல் தீண்டல்கள்
முதல் ஊடல்
முதல் கூடல்
முதல் கண்ணீர்
முதல் மௌனம்
முதல் பிரிவு
நாம் கொண்டாடி தீர்க்க
இப்படியான சில குறிப்புகள்..
அப்படியான ஒரு குறிப்பில்
இன்றைய நாளும் இடம் பெற்று இருக்கிறது..
நம் முதல் சந்திப்பு..
இமைகளை இரவல்
வாங்கிக் கொண்டு ..
விடியும்வரை
விழித்திருந்து..
🖤
விடியல் நிலவிடம்
உன் நிலவரம்
விசாரித்து...
🖤
இருநூற்றைந்து
இரவுகள்..
இருநூற்றாரு
பகல்களென..
🖤
கவிதைக்குள்
கண்ணாமூச்சியாடி..
🖤
காதலென்று
கலவரம் செய்த
அந்த கண்கள்..
🖤
கண்டதும்
என்னை அடையாளம்
காணுமா...
🖤
இல்லையேல், காத்திருந்து
கடந்து போகுமா...
🖤
எதுவாயினும் அந்த
சில மணித்துளிகளில்...
🖤
மரணத்தின் நுனியில்
உயிர் பிழைத்த..
இதயத்தின் இயக்கம் போல..
🖤
உன்னைப் பார்த்த
மறுநொடி..
உயிர் பிழைத்தது
என்காதல்...♥️
இன்னும் சில பக்கங்கள் கடந்தேன்
கண்ணீரில் நமந்து போய் கிடக்கின்றன
அதிலும் சில..
நாம் சேர்ந்து கேட்ட பாடல்களின் வரிகளால்
நிறைந்து கிடக்கும் பக்கங்களில்
இன்னும் ஜீவன் இருக்கிறது..
பிடித்து பரிமாறிய பார்வைகள்
இன்னும் தன் இமைகளுக்குள்
நம் பிம்பங்களை பிடித்து வைத்திருக்கிறது..
பசிக்கு பரிமாறிய முத்தங்களின்
ஈரங்களை இதழ்கள் இன்றும் ஒற்றி எடுக்கிறது..
சேர்ந்து நனைந்த மழை கவிதைகளில்
இன்னும் சாரல் அடிக்கிறது..
சோகம் தாங்கிய உள்ளங்கை சூடுகளில்
உஷ்ணம் பரவுகிறது..
மடி தாங்கிய நினைவுகள்..
தோள் சாய்ந்த நிமிடங்கள்..
விரல் இடுக்குகளின் இறுக்கங்கள்..
விழிகள் தொலைத்த வெளிச்சங்கள்..
இழப்புகளை ஈடு செய்ய இயலா
வெற்றிட்டங்கள்...
இப்போதும் இருவருக்கும் இடையில்
நிறைந்து கிடக்கும் மௌனங்கள்
என அத்தனையும் கவிதையில்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்..
இருந்தும் கூட
இன்னும் கிடைத்தபாடில்லை
தொலைந்த நானும்..
நான் தொலைத்த நீயும்...!
© sha💕jan
கேட்பாரற்று திறந்து கிடக்கும்
புத்தகத்தின் பக்கங்களை
காற்று புரட்டி பார்த்து
கதை சொல்வது போல்..
என் உணர்வுகள் கொட்டி எழுதிய
நாட்குறிப்பின் பக்கங்களை..
எனக்கு நானே வாசித்து
கொண்டிருக்கிறேன்..
அதன் வரிகளில் நேசத்தின் வாசம்
இன்னும் அப்படியே இருக்கிறது..
நினைவுகள் உதிர மனமின்றி
ஒட்டிக்கொண்டு
உறவாடுகின்றன..
அதன்
முதல் பக்கத்தில்..
என்பெயரோடு சேர்த்து எழுதிய
உன்பெயர்..
என்னவென்று எவரும்
அறிந்துவிட கூடாதாதென்று
ஒன்றோடு ஒன்று கலந்து
எழுதியதால்
இரண்டிற்கும்
அப்படி ஒரு பிணைப்பு நாம் பிரிந்த பின்பும்
அவை ஒட்டிக்கொண்டுதான் இருக்கின்றன..
அதன் சில பக்கங்களில்
நான் மட்டுமே பேசிகொண்டிருந்தேன்..
அவை
உனக்கு சொல்ல நினைத்த
என் காதல் கிறுக்கல்கள்..
அதன் இன்னும் சில பக்கங்கள்
பட்டாம்பூச்சிகளின் குடியிருப்பை போல
என்று என்னும் அளவிற்கு..
அத்தனை வண்ணங்கள் சுமந்து
உன்னை வரவேற்று கொண்டிருந்தன..
விண்மீன் பறித்த கதை சொல்லி
நீ பேசிக்கொண்டிருக்க நான்
கேட்டுக் கொண்டிருக்கிறேன்..
இடையில் சில பக்கங்கள்
நம் கண்ணாமூச்சி காதலை..
கண்டும் காணாமலும்
கடந்து போக..
கவிதைக்கும் கற்பனைக்கும்
உயிர் தந்த நம் காதல்
ஒரு தொடுவானம் தேடிய
பயணம் போல் நீள்கிறது
எத்தனை தூர பயணம் என்றால்..
இனி வரும் பிறவிகளிலும் கூட
நம் இப்படியே..
தொடர்வோம் என்னும் அளவிற்கு..
முதல் பார்வைகள்
முதல் முத்தங்கள்
முதல் தீண்டல்கள்
முதல் ஊடல்
முதல் கூடல்
முதல் கண்ணீர்
முதல் மௌனம்
முதல் பிரிவு
நாம் கொண்டாடி தீர்க்க
இப்படியான சில குறிப்புகள்..
அப்படியான ஒரு குறிப்பில்
இன்றைய நாளும் இடம் பெற்று இருக்கிறது..
நம் முதல் சந்திப்பு..
இமைகளை இரவல்
வாங்கிக் கொண்டு ..
விடியும்வரை
விழித்திருந்து..
🖤
விடியல் நிலவிடம்
உன் நிலவரம்
விசாரித்து...
🖤
இருநூற்றைந்து
இரவுகள்..
இருநூற்றாரு
பகல்களென..
🖤
கவிதைக்குள்
கண்ணாமூச்சியாடி..
🖤
காதலென்று
கலவரம் செய்த
அந்த கண்கள்..
🖤
கண்டதும்
என்னை அடையாளம்
காணுமா...
🖤
இல்லையேல், காத்திருந்து
கடந்து போகுமா...
🖤
எதுவாயினும் அந்த
சில மணித்துளிகளில்...
🖤
மரணத்தின் நுனியில்
உயிர் பிழைத்த..
இதயத்தின் இயக்கம் போல..
🖤
உன்னைப் பார்த்த
மறுநொடி..
உயிர் பிழைத்தது
என்காதல்...♥️
இன்னும் சில பக்கங்கள் கடந்தேன்
கண்ணீரில் நமந்து போய் கிடக்கின்றன
அதிலும் சில..
நாம் சேர்ந்து கேட்ட பாடல்களின் வரிகளால்
நிறைந்து கிடக்கும் பக்கங்களில்
இன்னும் ஜீவன் இருக்கிறது..
பிடித்து பரிமாறிய பார்வைகள்
இன்னும் தன் இமைகளுக்குள்
நம் பிம்பங்களை பிடித்து வைத்திருக்கிறது..
பசிக்கு பரிமாறிய முத்தங்களின்
ஈரங்களை இதழ்கள் இன்றும் ஒற்றி எடுக்கிறது..
சேர்ந்து நனைந்த மழை கவிதைகளில்
இன்னும் சாரல் அடிக்கிறது..
சோகம் தாங்கிய உள்ளங்கை சூடுகளில்
உஷ்ணம் பரவுகிறது..
மடி தாங்கிய நினைவுகள்..
தோள் சாய்ந்த நிமிடங்கள்..
விரல் இடுக்குகளின் இறுக்கங்கள்..
விழிகள் தொலைத்த வெளிச்சங்கள்..
இழப்புகளை ஈடு செய்ய இயலா
வெற்றிட்டங்கள்...
இப்போதும் இருவருக்கும் இடையில்
நிறைந்து கிடக்கும் மௌனங்கள்
என அத்தனையும் கவிதையில்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்..
இருந்தும் கூட
இன்னும் கிடைத்தபாடில்லை
தொலைந்த நானும்..
நான் தொலைத்த நீயும்...!
© sha💕jan
Related Stories