...

7 views

💞அவள்..... 💞
கீழ்வானம் செக்கச்சிவந்திருந்தது......
மெல்லிய காற்று
தாலாட்டுப்
பாடிக்கொண்டே தழுவிச்சென்றது.......

அழகிய வண்ணத்தில் அன்றலர்ந்த
மலர் ஒன்று
புன்னகையுடன்
காற்றின் தாலாட்டுக்கு நடனமாடியது......

நான் இரசித்துக்
கொண்டிருந்ததை இன்னொருத்தியும் இரசித்ததை
கவனித்தேன்.....

அவள்
புத்தம்புது மலராய் காணப்பட்டாள்....
காற்றில்
அவள் வண்ண
உடை சலசலக்க
அவள் அந்த
வண்ண மலரை நாடிச் சென்றாள்......

ஒரு மலர்
இன்னொரு
மலரை முத்தமிடுவதை என்றாவது பார்த்திருக்கிறீர்களா?
நான் பார்த்தேன் .....

அவள்
மெல்லுடலைத் தீண்ட அவளருகில் சென்றேன்..... நான் செல்ல செல்ல அவளும்
ஒவ்வொரு மலராய் முத்தமிட்டு சென்று கொண்டிருந்தாள்......

நான் பின்தொடர்வது
அவள் கண்டறிந்து
விட்டாள் போல....
அவள் ஒரு
மலரின் அழகில்
மயங்கி நின்றதைப்
போல நின்றாள்....

நான் அவளருகில்
மெதுவாக சென்றேன்.... எங்கே
தொலைவில் சென்றுவிடுவாளோ
என்ற பயத்தில்
மிக மெதுவாகவே சென்றேன்.....

அவளை மெல்லத் தீண்டினேன்....
அவள் தன்
மேனி அழகை
என் மீது
சற்று பூசிவிட்டு .....

என் கரங்களில்
முத்தமிட்டு
சட்டென
பறந்து சென்றாள் வண்ணத்துப்பூச்சியான அவள்.........
© 💞அனுராதை பாரதி 💞